வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சுறா- பட விமர்சனம்


சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய் நடித்த சுறா படம் இன்று உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. 
`சுறா' விஜய்க்கு 50வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காலையிலேயே திரையரங்குகளில் காத்திருந்தனர்.
படம் துவக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சிகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் கதை சென்றது. விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் வந்த தால் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்லானது. டிக்கெட் கிடைக்காதவர்கள் நீண்ட வரிசையில் அடுத்த காட்சிக்காக காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.  

இது சன் நியூஸ் .....
ஆண்டவா தமிழ் நாட்டே  காப்பாற்று ????????????/

பட விமர்சனம்:

 எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.
இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. 



எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.


இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.


கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.


வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது..

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
வேட்டைக்காரன்  பார்ட்  2
நன்றி : தினகரன் 
நன்றி :தட்ஸ் தமிழ்  

சனி, 24 ஏப்ரல், 2010

இருட் டு கடை

திருநெல்வேலி  பாலம் ஸ்ரீபுரம்  போஸ்ட் ஆபீஸ்  எதிர 7  மணிக்கு மேல  ஒரு நைட் ஹோட்டல்  ஒன்று
உள்ளது . ஒன்லி சைவம் . அப்பா மகன்  நடத்துகிறார்கள் .இங்க அப்படி என்ன  ஸ்பெசல் . சீப்பு ரேட் !!!!
ரூபாய் 20 க்கு , வயறு ரொம்ப  சாப்டலாம்.  ருசி யும்  நல்ல  இருக்கு .முட்டை தோசை. .இட்லி . அப்புறம்
ரூபாய் 5 க்கு மொச்சி பயிறு  குட்டு சூபரு. அதை விட  கவனிப்பு நல்ல இருக்கு . குறிப்பு : ஹோட்டலுக்கு நேம் போர்டு  இல்லை . இங்க இருட் டு கடை  ( அல்வா ) க்கு கூட  போர்டு  இல்லை. நல்ல இருந்தா விளம்பரம்  எதுக்கு !!!

ரெட்டச்சுழி படம்


தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம்

ரெட்டச்சுழி  படம் போய் பாக்கணும்-னு நெனச்சேன். கேபிள் சங்கர்

திரை விமர்சனம் படிசிசுட்டு  படம் மொக்கையாகிவிட்டதே என்ற வருத்தம்.

.http://cablesankar.blogspot.com/2010/04/blog-post_24.html

 


புதன், 21 ஏப்ரல், 2010

கல்யாணம்

 வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1.
படிப்பு
2.
விளையாட்டு
3.
பொழுது போக்கு,காதல்
4.  கல்யாணம் 
5.
6.
7.

 
 ஹலோ... என்ன தேடுறீங்க 

கல்யாணம்  வந்த பிறகுதான் எல்லாமே கண்டமாகி   போயிருமே...!
வேலை நேரத்துல வேலைய பார்காம என்ன இது கப்பி தனமா ... 
போய் வேலைய பாருங்கையா

திங்கள், 19 ஏப்ரல், 2010

மிட் நைட் ட்ரெயின்

ரொம்ப நாளா நான் படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின்
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .30 கு  எட்த்து காலை 6  மணிக்கு மதுரை போகும் .மனிக்கவும் நகரும் .
அதை ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  வேளை  வெட்டி யெல்லாமா !!!!!!!!! இருந்தா போய்
பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  அனுபவப் பூர்வம   தெரியம் .ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும.  நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி    வாக்கிங்  போன கூட
மதுரை வந்துரும் .

சனி, 17 ஏப்ரல், 2010

முடியாது!!!!!!!!!


என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

முடியுமா?

எல்லா stage'லயும் 
டான்ஸ் ஆடலாம்.. 
ஆனா கோமா stage 'ல 
டான்ஸ் ஆட 
முடியுமா?

நேத்து ராத்திரி


அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
 
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

என்ன கொடும சார் இது?....

 
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது
?....

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இனி அப்படி ஒரு படம் வருமா ?

                                   
நண்பா  "சலங்கை ஒலி"
படம் ரொம்ப பிடிக்கும் . .....
இனி அப்படி ஒரு படம் வருமா ?
என் வாழ்கை கதை  போல படம் இருக்கும் .
.

திங்கள், 12 ஏப்ரல், 2010

இது போதும் எனக்கு


நிலாத் தட்டு
நட்சத்திர சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இது போதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இது போதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்

இது போதும் எனக்கு 

பாலைவனம் கடந்து வந்தேன்

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எப்படி வெற்றி கிடைக்கும்.

''நான் வசந்தபாலன் ஆனது எப்படி?''

''என் அப்பா மின்சார வாரியத்தில் அக்கவுன்டன்ட். என் ப்ளஸ் டூ மார்க்ஷீட்டைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'என்னப்பா, அக்கவுன்டன்ட் பையன் பியூன் வேலைக்குக் கூடத் தேற மாட்டான்போல!'ன்னு கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டார். நிச்சயம் நான் பியூன் வேலைக்கு லாயக்கில்லாதவன்னு எனக்கும் அப்பவே தெரியும். ஆனா, அதை வாய்விட்டு அப்பாகிட்ட சொல்ல முடியலை. காத்துட்டு இருந்தேன்... எனக்கான காலம் வரும்னு காத்துட்டு இருந்தேன்!'' - கண்கள் பார்க்கிறார் வசந்தபாலன். 'அங்காடித் தெரு' வின் வெயில் ஆல்பம் புரட்டிய இயக்குநர். சின்சியர் சினிமா என்பதில் தீவிரம் காட்டும் படைப்பாளி!



''விருதுநகர்ல பாலமுருகனாப் பிறந்து வளர்ந்தேன். பள்ளிக்கூடப் பருவத்துல இருந்தே சிவப்புச் சித்தாந்தங்கள் மேல ஆர்வம். கம்யூனிஸம், மீட்டிங் மேடை, காரக் கடலை, கார்ல்மார்க்ஸ், மூலதனம், டி.ஒய்.எஃப்.ஐ., லெனின், இரவு நேர வாழ்க்கைன்னு வெறியோடு திரிஞ்ச நாட்கள் நிறைய. நாலு பேர் முன்னாடி கூச்சம் பார்க்காமப் பேசுற தால, பேச்சுப் போட்டிகள்ல மேடையேறிப் பழக்கம். இலக்கியச் சோலைன்னு ஒரு அமைப்பு, சுனைன்னு ஒரு பத்திரிகை, சமூக சேவைகள்னு பம்பரமாத் திரிஞ்சேன். காலேஜ்ல நல்லாப் படிக்கிற பையன் அப்பப்போ சினிமாவுக்குப் போற மாதிரி, அப்பப்போ காலேஜ் கிளாஸ் ரூம் பக்கம் ஒதுங்கி பி.எஸ்சி., பாட்டனி முடிச்சேன். நான் எம்.ஏ., இங்கிலீஷ் படிக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. 'ஆனா, என் ஆசை அது இல்லையே'ன்னு சென்னைக்குக் கிளம்பிட்டேன். இங்கே கால்வெச்ச பிறகு தான் தெரிஞ்சது... சென்னை எவ்வளவு பிரமாண்டம்னு. ஓர் அப்பாவியை சென்னையின் ஒவ்வொரு தினமும் வெறிகொண்டு துரத்தும். என்னையும் துரத்துச்சு!


வளசரவாக்கத்துல சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ் வீட்ல தஞ்சமடைஞ்சேன். சின்னச் சின்ன வேலைகள். அடுத்து எடிட்டர் லெனின், வி.டி.விஜயன்கிட்ட சேர்ந்து 35 படங்கள் வேலை பார்த்தேன். அப்பதான் 'ஜென்டில்மேன்' பட வேலைகள் ஆரம்பிச்சது. ஷங்கர் சார்கிட்ட சேர்ந்துட்டேன். 'முதல்வன்' டிஸ்கஷன் சமயம் வரை அவர்கூடவே இருந்தேன்.



நாலு வருஷம் நாயாப் பேயா அலைஞ்சு திரிஞ்ச பிறகு, முதல் பட வாய்ப்பு கிடைச்சது. 2002-ல் 'ஆல்பம்' ரிலீஸ். கிட்டத்தட்ட என் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருந்தேன். அந்தப் படைப்புல இருக்குற உண்மை நிச்சயம் அதை ஜெயிக்கவைக்கும்னு எனக்கு நம்பிக்கை. ஆனா, படம் ஃப்ளாப். அந்த உண்மை சுட்டுச்சு. இண்டஸ்ட்ரியில ஷங்கர் சார் அசிஸ்டென்ட்னா கழுத்துல எக்ஸ்ட்ரா காலர் முளைச்ச உணர்வு இருக்கும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனா, 'ஆல்பம்' படம் பண்ணப்போ, என்னைச் சுத்தி அவ்வளவு நெருக்கடி. அதுவரை எங்க அப்பாவைத் தவிர, என்னை யாரும் கட்டுப் படுத்த முயற்சித்தது இல்லை. ஆனா, அந்தச் சமயம் ஆளாளுக்கு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தாங்க. 'ஓ.கே. நம்மளைவிட அனுபவம் ஜாஸ்தி அவங்களுக்கு. நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்கபோல'ன்னு நினைச்சு, எல்லாத்துக்கும் 'சரி சரி' சொன்னேன். நான் நினைச்ச சினிமாவை எடுக்க முடியலை. ரெண்டு விஷயம் புரிஞ்சது. என்னதான் யதார்த்தமான படம் எடுக்க ஆசைப்பட்டாலும், அதுல மினிமம் சினிமா எலிமென்ட்ஸ் அவசியம். உலகமே உன்னைக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த நினைச்சாலும், உனக்குச் சரின்னு தோணுற விஷயத்தை, நீ ஆசைப்பட்ட விஷயத்தைச் செய்யத் தயங்காதே! ஆனா, இந்த விஷயங்கள் எனக்குப் புரிஞ்சுருச்சுன்னு யாருக்கும் புரியலை. அடுத்து படம் கிடைக்கலை.

இன்னொரு நாலு வருடம். துன்பங்களும் துயரங்களும் மட்டுமே துரத்தியடிச்ச காலம். முதல் படத்தைவிட, முதல் படம் சரியாப் போகாதவனுக்கு கிடைக்கிற ரெண்டாவது வாய்ப்பு குதிரைக் கொம்பு. என்ன பண்ணேன், ஏன் பண்ணேன்னு இப்பவும் ஆச்சர்யப்படுத்துற பல வேலைகளைப் பண்ணிட்டுத் திரிஞ்சேன். 'காதல்' படம் ரிலீஸாகி ஹிட். மனசுக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சு பட்டுப்போய்க்கிடந்த நம்பிக்கைச் செடி சின்னதாத் துளிர்த்தது. ஷங்கர் சார்கிட்டயே தஞ்சமடைஞ்சேன். 'வெயில்' அடிச்சது. 'பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை'ன்னு கமென்ட் அடிச்ச பக்கத்து வீட்டுக்காரர்ல இருந்து பலருக்குப் பதில் சொல்லிட்ட திருப்தி. அடுத்த படம் பத்தி யோசிச்சப்ப, நிறைய ஹீரோக்கள்கிட்ட இருந்து அழைப்பு. ஆனா, எனக்குக் கிடைச்ச ஸ்பேஸை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. 'அங்காடித் தெரு' புராஜெக்ட் ஆரம்பிச்சேன். 'அதான் உனக்கு சினிமா தெரியும்னு நிரூபிச்சுட்டல்ல! சூப்பர் ஹீரோ, நல்ல பேனர்னு படம் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதானே?'ன்னு எல்லார்கிட்ட இருந்தும் அட்வைஸ். 'சரி சரி'ன்னு கேட்டுக்கிட்டேன். ஆனா, என் முடிவில் தீர்க்கமா இருந்தேன்.







நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை. அதுல எப்படி வாழ்ந்தோம்கிறதைவிட என்ன பண்ணோம்கிறதுதானே முக்கியம். 'உதிரிப் பூக்கள்', '16 வயதினிலே' படங்கள் ரிலீஸ் ஆனப்ப கூடவே நிச்சயம் வேறு பல படங்களும் ரிலீஸ் ஆகியிருக்கும்தானே. அந்தப் படங்கள் பேர் என்னன்னுகூட இப்ப யாருக்கும் தெரியாதே. 'நாயகன்', 'மனிதன்' ரெண்டு படங்களும் ஒண்ணாத்தானே ரிலீஸ் ஆச்சு. இப்பவரை எந்தப் படத்தை நாம சிலாகிச்சுட்டு இருக்கோம்? யதார்த்தமோ, கமர்ஷியல் சினிமாவோ எல்லாத்துக்கும் வலியும் வேதனையும் நிறைஞ்ச உழைப்பைத்தான் கொடுக்கிறோம். அதுல எது காலம் கடந்து நிக்கும்னு கொஞ்சம் யோசிச் சேன்!






என்னோட வளர்ச்சிக்கு அதிகாரபூர்வமா சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ், லெனின், வி.டி.விஜயன், ஷங்கர் சாருக்கெல்லாம் நன்றிகள் ஆயிரம். ஆனா, இத்தனை தூரம் என்னை அடைகாத்து, அடையாளப்படுத்தியதில் என் இரண்டு நண்பர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒண்ணாம் வகுப்பில் இருந்து இப்போ வரை நான் திரும்புறப்பலாம் என் தோளுக்குப் பக்கத்தில் இருக்கும் முருகன். சிலேட்டுல 'அ' போடுறதுல ஆரம்பிச்சு, வயசுக் காலத்துல ஆட்டம் போடுற வரை எப்பவும் கூடவே இருந்தவன். இப்போ நியூஜெர்ஸியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கான். இப்பவும் நான் பெருசா சம்பாதிச்சுடலை. ஆனா, எப்பவும் சம்பாதிக்காம இருந்த காலத்துல அவன் இல்லைன்னா... ஒண்ணு நான் தற்கொலை பண்ணிட்டு இருந்திருப்பேன். இல்லைன்னா ஏதாவது ஒரு கம்பெனியில கணக்கு எழுதி மேஜையைத் தேய்ச்சுட்டு இருப்பேன். எப்ப கேட்டாலும் டாலர்களில் பணம் அனுப்புவான். அந்த 'முருகன் டாலர்'தான் எனக்கு ஆதரவா இருந்துச்சு. 'எனக்குத் தெரியும்டா... உன்னால முடியும். நீ ஜெயிப்பேடா'ன்னு எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காம ஆறுதலும் தேறுதலும் சொல்லி என்னை அணைச்சுக் கொண்டுவந்தவன். எத்தனை தயக்கத்தோடு எப்போ உதவி கேட்டா லும், 'எவ்வளவு வேணும்?'னு மட்டும்தான் கேள்வி கேட்பான். லட்சங்களில் நீண்ட அவனோட நிதியுதவியைக் காட்டிலும், என் மேல அவன் வெச்சிருந்த நம்பிக்கை பல கோடி களுக்குச் சமம்.


 நண்பன் வரதராஜன். 'ஆல்பம்' பட சமயத்துல பழக்கமானவன். நிழல் மாதிரி கூடவே இருந்து நான் உடைஞ்சு விழாமப் பார்த்துக்கிட்டவன். கொஞ்சம் அப்பிடி இப்படி நான் தடம் மாறுறப்போ, என்னைத் திரும்ப உள்ளே இழுத்துப் போடுறவன். அந்த ரெண்டு நட்பும் இல்லைன்னா, நிச்சயம் இந்த வசந்தபாலன் இல்லை!''

கி.கார்த்திகேயன்,
Thanks:youthful.vikatan.com

சனி, 10 ஏப்ரல், 2010

“நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி”


பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!



“குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும் சிரமப்பட்டேன். பிறகு அந்தத் தொகையை சாமர்த்தியமாக முதலீடு செய்தேன். முதலீடு வளர்ந்தபோது என் நிலையும் பல மடங்கு உயர்ந்தது” என்கிறார்கள்.


இதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறிவிட்டும் போகலாம். சாமர்த்தியம் என்று அடையாளம் கண்டு பின்பற்றியும் பார்க்கலாம்.


சரியாக முதலீடு செய்வதென்பது, ஒரு வலைதளம் தொடங்குவதற்குச் சமம். உங்கள் நிறுவனத்திற்கென்று ஒரு வலை தளத்தை நீங்கள் தொடங்கிவிட்டால் அதனை அவ்வப்போது பராமரித்தால் போதும். உங்களுக்காக உங்கள் வலை தளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.






சாமர்த்தியமான முதலீடும் அப்படித்தான். உலக அளவிலான மாற்றங்களுக்கேற்ப பல சமயம் நீங்கள் எதிர்பாராத வேகத்தில் விசுவரூபமெடுத்து வளர்ந்து கொண்டிருக்கும்.






ஒரு முதலீடு வளர்வதென்பது ஆரோக்கியமானவர்களின் அங்க அவயங்கள் போன்றது. உங்கள் உடலின் அடிப்படை ஆரோக்கியத்தை மட்டும் உறுதிசெய்து கொண்டால் இருதயம், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம் என்று உள்ளே உள்ள அவயங்களும் முறையாக இயங்குவதும் இரத்த ஓட்டம் சரியாக நிகழுவதும் எப்படி இயல்பாக நிகழ்கிறதோ அதே போல முதலீட்டின் மதிப்பும் வளர்ந்து கொண்டேவரும்.






பதினாறாவது வயதிலேயே சிறிய தொகை ஒன்றை சாமர்த்தியமாக முதலீடு செய்ய முற்பட்டு, அதன் வழியே அபார வளர்ச்சி கண்ட ஒரு சாதனையாளர், தன் முதலீட்டு அனுபவங்களை – அதில் முக்கியப்பங்கு வகித்த சமயோசிதத்தை – சாமர்த்தியத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்விதமாய் அருமையான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “Invest the Happionaire way” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யோகேஷ் சாப்ரியா, சாமர்த்தியமான முதலீடு பற்றிய புத்தம்புதிய பார்வைகளைப் பக்கங்கள் தோறும் பதிவு செய்கிறார்.






“தினம் உங்கள் பணம் வேலைக்குப் போகிறதா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் யோகேஷ். “பல நிறுவனங்களின் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அந்த நிறுவனம் வேலை பார்க்கிறபோது தன்னுடைய பணமும் வேலை பார்க்கிறது” என்பது இவருடைய சித்தாந்தம்.






“பணத்துக்காக நீங்கள் வேலை பார்ப்பது போலவே பணம் உங்களுக்காக வேலை பார்க்கட்டும்” என்கிற யோகேஷ், தான் பங்கு வாங்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதன்மூலம், தன்னுடைய செலவுகளின் வழியாகக்கூட தன் முதலீடு வளர்வதற்கு வழி செய்வதாய்ச் சொல்கிறார்.






உதாரணமாக, பற்பசை தயாரிக்கும் கோல்கேட் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியிருந்தால் இவர் பயன்படுத்துவதும் அதே பற்பசைதான்.






பதினாறு வயதில் முதலீடு செய்த யோகேஷ், பன்னிரண்டு வயதில் தொழில் தொடங்கிய அனுபவம் சுவாரசியமானது. அயல்நாட்டுப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பள்ளியில் கண்காட்சி ஒன்று நடந்தது. மாணவர்கள் விற்பனை அரங்குகள் எடுத்து தயாரிப்புகளை விற்கலாம் என்றபோது, இந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் பரபரப்படைந்தான்.






என்ன செய்யலாம் என்று எண்ண ஓட்டங்களில் இருந்தபோது இவரின் தங்கை தந்த எலுமிச்சைச்சாறு தொழில் தொடங்கும் தாகத்தைத் தணித்தது. “இந்தியன் லெமனேட் கம்பெனி” என்ற நிறுவனம் தொடங்க முடிவு செய்தான் சிறுவன். லெமனேட் தயாரிக்க, தன் சின்னத் தங்கையை சம்பளத்திற்கு நியமித்தான். அரங்க வாடகை, மூலப்பொருள் எல்லாம் சேர்த்து ரூ. 1000/- ஆனது. தன் திட்டத்தை நண்பர்களிடம் சொல்லி, பங்குகள் பெற்றான் சிறுவன். முதலீடு ஆயிரம் ரூபாய் – ஒரு கோப்பை எலுமிச்சைச்சாறு தயாரிக்கும் செலவு – ஒரு ரூபாய் – தயாரிப்பு அளவு – 1000 கோப்பைகள் – ஆதாயம் (முதலீடு போக) 4000/- ரூபாய்!






100 ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 500 ரூபாய் லாபம் தந்தபோது யோகேஷின் அசாத்திய ஆற்றல் அரும்புப் பருவத்திலேயே அடையாளம் காணப்பட்டது.






தன் சொந்த அனுபவத்திலிருந்தும் விரிவான தொழில் அனுபவங்களில் இருந்தும் ஏராளமான வழிகாட்டுதல்களை இந்த நூலில் யோகேஷ் வழங்குகிறார்.






ஒரு மனிதர் சாமர்த்தியமாய் முதலீடுகளைச் செய்ய பத்து முத்திரை வழிகாட்டுதல்களைப் பட்டியலிடுகிறார் யோகேஷ்.






1. நீங்கள் புரிந்துகொண்டு – பயன்படுத்தும் சேவைகளும் வணிகங்களும் உங்களுக்குப் புரியாதவற்றை விட பலமடங்கு மேலானவை.






2. தொழில் ஒன்று செய்தால் அதில் ஆதாயம் அவசியம்.






3. தொழில் ஒன்று செய்தால் அதில் வளர்ச்சி அவசியம்.






4. தொழிலை நடத்துபவர்கள் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படவேண்டும்.






5. தனித்தன்மை வாய்ந்த தொழில் நிச்சயமாய் ஆதாயம் தரும். .






6. குறுகிய கால பரபரப்பைவிட நீண்டகாலம் நிலைக்கும் தொழிலை நிதானமாய்ச் செய்வதே நல்லது.




7. தொழில் பற்றியும் அதன் தயாரிப்பு பற்றியும் நீங்கள் ஏற்படுத்தும் நல்லெண்ணம் மிக மிக முக்கியம்.






8. உங்கள் தொழில் எப்படி ஆதாயம் பெற்றுத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். கடினமான நடைமுறைகளை தவிர்ப்பது முக்கியம்.



9. செய்யும் தொழில் சந்தோஷமாகவும் ரசித்துச் செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும்.






10. குறுகிய சிந்தனைகளை விட்டுவிட்டு எல்லாத்திட்டங்களும் நீண்ட காலத்திற்கு உரியனவாய் அமையவேண்டும்.
Thanks:.namadhunambikkai.com



எப்படி இது சாத்தியம்

2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்
 
இத்தனை வெற்றிகளுக்கு மத்தியில் படு அமைதியாக, நிதானமாக இருக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இது சாத்தியம் என்று அவரிடம் கேட்டபோது, நான் போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வளருவற்கு முன்பே வீழ்த்தி விட விரும்புவேன். அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன் என்கிறார்
1993ம் ஆண்டு 25 பேர் அடங்கிய குழுவுடன், 86 ஆயிரம் டாலர் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது சன் டிவி. அந்த 25 பேரில் பலரும் கலாநிதியுடன் லயோலா கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களில் 20 பேர் இன்னும் கலாநிதியுடன் இருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் சன் டிவியை ஆரம்பித்து விட்ட கலாநிதி மாறன் அதன் ஒளிபரப்புக்காக முதலில் அணுகியது ஜீ டிவியை. அவர்களின் டிரான்ஸ்பான்டர்கள் மூலம் பிற்பகலில் மட்டும் ஒளிபரப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரினாராம் கலாநிதி.

இதற்காக சுபாஷ் சந்திராவை பார்க்க சென்றிருந்தார் கலாநிதி. ஆனால் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு சாதாரண அதிகாரியைத்தான் கலாநிதியால் பார்க்க முடிந்தது. அந்த அதிகாரியோ, தமிழ் நிகழ்ச்சியையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கூறி கலாநிதியின் கோரிக்கையை நிராகரித்து விட்டாராம்.

மனம் தளராத கலாநிதி அப்போது ஜீ டிவிக்குப் போட்டியாக இருந்த சிறிய சேனலான ஏடிஎன்-ஐஅணுகினார். அவர்களோ 3 மணி நேரம் ஸ்லாட் தருவதாக கூறினார். ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க மாட்டீர்கள் என்று அவ நம்பிக்கையுடன் கூறினார்களாம் கலாநிதியிடம்.

ஆனால் கலாநிதிக்கு நம்பிக்கை இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ் மொழிச் சானலை நிச்சயம் நடத்த முடியும், இந்தி ஆதிக்கத்தைத் தாண்டி வளர முடியும் என்று நம்பினார். மேலும் தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் தமிழ் புரியும் என்ற காரணத்தினால் தமிழா, இந்தியா என்று வரும்போது நிச்சயம் தமிழைத்தான் அவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையம் கலாநிதியிடம் இருந்தது. அதுதான் கடைசியில் ஜெயித்தது.
.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

வில்லியம் ஷேக்ஸ்பியர்:  
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 
 

பொன்மொழிகள்

லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.






ஆலன் ஸ்டிரைக்:  
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

சந்தோசம் சந்தோசம்


ந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி


கவலையில் உள்ளமனிதர்களை சிரிக்கவைத்த மனிதன் அழவைத்துவிட்டு சென்று விட்டான்

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
நாகராஜ் சார் உங்களை மறகக  முடியவேல்லை .

its meeeeeeee

சம்சன் பெலிக்ஸ்

நானும்
என் நண்பன்
சம்சன் பெலிக்ஸ் 
ஒரு மாலை ஆபீஸ்
சந்டிப்ப்பு .

ஆபத்துகளுள் பேராபத்து எது?


நடப்பது நடக்கட்டும் என்று நடக்கப் போகும் ஆபத்திலிருந்து ஒதுங்குவதுதான் ஆபத்துகளுள் பேராபத்து.
இப்போது சென்னையில் டைடல் பார்க் இருக்கிறதே இந்த இடத்தை என்னால் மறக்கவே முடியாது. காரணம் இங்கு நான் சந்தித்த ஒரு விபத்துதான். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைடல் பூங்கா சாலை வெறும் கருவேலங்காடாக இருந்த காலம் அது.
நடுவில் 30 அடி அகலத்தில் தார்ச்சாலை. இரு புறமும் மிக நெருக்கமாய்க் கருவேல மரங்கள். திடீரென இவற்றின் நடுவே இருந்து சைக்கிளில் ஓர் இளைஞர் வெளிப்பட்டார். நிற்கவேயில்லை. இருபுறமும் பார்க்காமல் மறுபுறம் கடக்கிறார். இது நான் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. என் வாகனமோ நெருங்கி விட்டது. பிரேக் அடித்தாலும் தவிர்க்கமுடியாத விபத்து.
இப்போது எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் சைக்கிளின் முன்டயரில் மோதுவதா, நடுவில் மோதுவதா, பின்டயரில் மோதுவதா என்பதுதான். வேறு வழியே இல்லை.
என் அனுபவம் அப்போது கைகொடுத்தது. நடுவில் தட்டினால் ஆள் காலி! முன் டயரில் தட்டினால், தட்டிய வேகத்தில் நம் வண்டிக்குள் வந்து விழுவான். பின் டயரில் தட்டினால் வாகனத்திற்கு வெளியில் போய் விழ வாய்ப்பு. இதன் மூலம் மறுபடி அந்த இளைஞர் மீது வாகனம் ஏறி ஓடிவிடாது.
எனவே பின் டயரில் மோதுவது என முடிவு செய்தேன். (அடப்பாவி மனுஷா! என்கிறீர்களா? என் நிலை எனக்கல்லவா தெரியும்?) அதன்படி மோதினேன். குறைந்த அடிகளோடு தப்பித்தார்.
இந்த நேரத்தில் நான் எதிர்கொள்ளும் ஆபத்து உறுதி என்று நான் ஸ்டியரிங்கை விட்டு விட்டு, ஐயோ! என்று கண்களை மூடிக்கொண்டு விட்டால் அது எவ்வளவு பேராபத்தாகியிருக்கும்!
இப்படித்தான் பல மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதிலிருந்து விலகி ஓடுவதாக எண்ணிக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லது விஷயம் மேலும் முற்றும் வகையில் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறார்கள்.
மனபலம் தேவையென்றால் நம் நல விரும்பிகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். விரும்பி ஆள் பலம் தேவையென்றால் அதைக் கவனிக்க வேண்டும். நடப்பது நடக்கப் போகிறது என்றாலும் சேதாரம் குறைவாக இருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டுமே தவிர, ஓடி ஒளியக் கூடாது

தோல்வியை விட மோசமானது எது?

தோல்வியை விட மோசமானது எது?
தோல்வி என்பது பல நேரங்களில் கேவலமாகவும் அவமானகரமானதாகவும் நம்மவர்களால் எடுத்துக் கொள்ளவும் பார்க்கவும் படுகிறது.
தோல்வி, சீண்டப்பட்ட மரவட்டை போல், நத்தை போல் மனத்தை சுருளச் செய்தும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளச் செய்தும் வேடிக்கை பார்க்கிறது.
இதுகூடப் பரவாயில்லை. சிலரை இந்த உணர்வு தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்று டென்னிஸ் உலகின் முடிசூடாத மன்னனாக விளங்கும் ரோஜர் பெடரர் பல வெற்றிகளைக் குவிக்கிறார். ஆனால் இவரது வெற்றிகள் எல்லாம் சுலபத்தில் வாய்த்தவையோ வந்தவையோ அல்ல.
சில வெற்றிகள், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிப் போய்த் தொட்டுவிட்டுப் பிறகு கைக்கு வந்தவை. 6-4; 6-4; 6-6 என்று முடியப் போகிற தருணத்தில் 6-7; 2-6; 3-6 என்று அடியோடு திரும்பியவை.
இதற்குக் காரணம் ரோஜரின் போராடும் குணம்தான். இவரது வெற்றித் திறமையைவிட கடைசி நிமிடம்கூட விட்டுக் கொடுக்காத போராட்டமே என்னைப் பல நேரங்களில் கவர்ந்திருக்கிறது.
தோல்வியை நெருங்குகையில் ‘ஐயோ! தொலைந்தோம்!’ என்று எதிர்மறையாக எண்ணுவதை விட்டுவிட்டு, ‘இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் எப்படி இருக்கும்?” என்று சிந்திக்க ஆரம்பித்து, வெற்றியின் பலன்களை அடைவதாகவும் எண்ணிப் பார்த்தால் நமக்குள் உறங்கிக் கிடக்கும் மகத்தான சக்தி தட்டி எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.
தோல்வியின் விளிம்பில் அதைத் திசை திருப்பவல்ல ரோஜா பெடரர் இந்த உத்தியைத்தான் கையாள்கிறாரோ என நான் ஊகிக்கிறேன். நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்த பிறகும் மேற்கொள்ளப்படும் முயற்சி இருக்கிறதே, இது நமக்கு இதுவரை கிடைத்திராத புதிய அனுபவமாக இருக்கும்.
ஒரு முதல் தர ஆட்டக்காரருக்கு எதிராக ஒரு கற்றுக்குட்டி ஆட்டக்காரர் எடுக்கும் ஒரு பாயிண்ட் கூடப் பார்வையாளர்களால் பெரிய அளவில் கைதட்டி வரவேற்கப்படும். இந்த அனுபவம் ஒரு கற்றுக் குட்டி ஆட்டக்காரருக்கு மகத்தான மன எழுச்சியைத் தரவல்லது.
ஆக, எதிரி எவ்வளவு பலமானவன் என்பது முக்கியமல்ல. நம் முயற்சி எந்த அளவு உண்மையானதாக இருந்தது என்பதே முக்கியம்.
இந் நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆம்! தோல்வியைவிட மோசமானது முயற்சி செய்யாமல் இருப்பதே!

வாண்டாம் பார்காதிங்க சொல்லிபுட்டன் அம்புட்டுத்தான் .


ஜெகதா

மதுரை: ஏட்டு மூலம் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமங்கலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி டிரைவரிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட பொன்ராஜ் என்ற ஏட்டு லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கியது தெரிந்து போலீஸ் உயர் அதிகாரி உ‌த்தரவின் பேரில் பொன்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் இதுபற்றி விசாரணை நடந்தபோது, திருமங்கலம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆன்டனி ஜெகதா சொல்லித்தான் பொன்ராஜ் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஜெகதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஆசை


ஆசை என்னும் அசுர விதை மனதில் விழும் அந்த முதல் கணத்திலேயே அதை மிகக் கவனமாகக் கையாளுங்கள். அனாவசியமாக அதை நிறைய நேரம் மனதில் தங்க விடாதீர்கள். அது விரைவில் வேர் விட்டு பல மடங்கு பெருகக் கூடியது. அவசியமானதா, நியாயமானதா, தகுதிக்கேற்றதா, கொடுக்கப் போகும் விலை சரி தானா என்றெல்லாம் சிந்தித்து, தேறினால் மட்டும் அதை மனதில் தங்க விடுங்கள். இல்லையென்றால் உடனடியாக அதை மறுபடி எழாதபடி எரித்து விடுங்கள். அவ்வாறு செய்ய முடிந்தால் ஏராளமான பிரச்னைகளில் இருந்தும் உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள் என்பது உறுதி.
நன்றி
ந.கணேஷன்

எப்படி வெற்றி கிடைக்கும்?

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்.

நன்றி .
N கணேஷன்
Coimbatore,